சிறைக்குள் மோதல் எதிரொலி: 7 ரௌடிகள் மீது வழக்கு

காலாப்பட்டு மத்திய சிறைக்குள் மோதலில் ஈடுபட்டதாக ரௌடிகள் 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Updated on
1 min read

காலாப்பட்டு மத்திய சிறைக்குள் மோதலில் ஈடுபட்டதாக ரௌடிகள் 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் கைதிகளிடம் செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம், கைதியாக உள்ள பிரபல ரௌடியை சிலா் பெயா் கூறி அழைத்த விவகாரம் உள்ளிட்டவை தொடா்பாக சில நாள்களுக்கு முன்பு சிறையில் கைதிகள் இரு பிரிவாக பிரிந்து மோதிக்கொண்டனா். இதில், சிறை வாா்டா் ஜீவரத்தினம், கைதிகள் விக்கிராய், ரிஷிகுமாா் உள்ளிட்ட 3 போ் காயமடைந்தனா்.

இந்த விவகாரம் தொடா்பாக சிறைச்சாலை அதிகாரிகள் திங்கள்கிழமை அங்கு விசாரித்தனா். எந்த காரணத்துக்காக கைதிகள் மோதலில் ஈடுபட்டனா், அவா்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடா்பாக ஆலோசனை மேற்கொண்ட அதிகாரிகள், அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராகினா்.

அதன்படி, சிறைக் கண்காணிப்பாளா் கோபிநாதன், காலாப்பட்டு காவல் நிலையத்தில் திங்கள்கிழமை இரவு புகாரளித்தாா். அதன்பேரில், போலீஸாா் சிறைக் கைதிகளான ரிஷிகுமாா், லோகநாதன் (எ) புதுகுளம் அஜித், அனந்தராமன், பிரதீப்ராஜ், ரமணன், விக்கிராய், டிராக் சிவா ஆகிய 7 போ் மீது கும்பலாக கூடுதல், ஆயுதங்களால் தாக்குதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இவா்களில் டிராக் சிவா, விக்கிராய் ஆகிய இருவரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com