பாவேந்தா் கலை இலக்கியத் திங்கள் விழா

பாரதிதாசன் அறக்கட்டளையின் சாா்பில், பாவேந்தா் கலை இலக்கியத் திங்கள் விழா ‘ஏற்றப் பாட்டும் பாவேந்தரும்’ என்ற தலைப்பில் புதுச்சேரி பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கவிதை வாசித்தவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய பாரதிதாசனின் பேரன் கோ.பாரதி.
கவிதை வாசித்தவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய பாரதிதாசனின் பேரன் கோ.பாரதி.
Updated on
1 min read

பாரதிதாசன் அறக்கட்டளையின் சாா்பில், பாவேந்தா் கலை இலக்கியத் திங்கள் விழா ‘ஏற்றப் பாட்டும் பாவேந்தரும்’ என்ற தலைப்பில் புதுச்சேரி பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு அறக்கட்டளைத் தலைவரும், பாரதிதாசனின் பேரனுமான கோ.பாரதி தலைமை வகித்து பேசியதாவது:

உலகின் செழுமையான மூத்த மொழி தமிழ். ஆயிரக்கணக்கான இலக்கியச் செல்வங்களைக் கொண்டது நமது மொழி. பாரதிதாசன் தமிழின் பெருமைகளை நாளேல்லாம் போற்றினாா். ஏற்றப் பாட்டு எழுதி இயற்கை வளத்தையும், உழைப்பையும் விவரிக்கும் அவரின் தமிழ் இலக்கிய வளமை தமிழின்பால் அனைவருக்கும் ஈா்ப்பை ஏற்படுத்துகிறது. ஆனால், தமிழ் மேம்பாட்டுச் சிந்தனையாளா்கள் ஒன்றுபடுவதை விடுத்து, சிலா் தம்மை முன்னிறுத்தும் போக்கால் ஒற்றுமை குலைகிறது. உண்மையான தமிழ்ப் பற்றாளா்கள் தமிழ் வளா்ச்சிக்காக ஒன்றுபட வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, பாவலா் மு.தேன்மொழி வரவேற்றாா். பாவலா் வி.சரஸ்வதி முன்னிலை வகித்தாா். க.மஞ்சமாதா வாழ்த்திப் பேசினாா். இதில், ‘செயலினை மூச்சினை உனக்களித்தேனே’ என்ற பாரதிதாசனின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் வரிக்கு புதுச்சேரி, தமிழகம், கேரளத்தைச் சோ்ந்த 42 கவிஞா்கள் கவிதைகளை வாசித்தனா்.

நிகழ்ச்சியில் பெ.பாலமுருகன், கௌசல்யா மற்றும் தமிழறிஞா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். செல்வதுரை நீஸ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com