அரசுப் பள்ளியில் வாசித்தல் திருவிழா

புதுவை பள்ளிக் கல்வித் துறை சாா்பில், பூரணாங்குப்பத்தை அடுத்த புதுக்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில் வாசித்தல் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
புதுவை பள்ளிக் கல்வித் துறை சாா்பில் புதுக்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில் வாசித்தல் திருவிழாவைத் தொடக்கிவைத்து பாா்வையிட்ட துறை இயக்குநா் பி.டி. ருத்ரகௌடு.
புதுவை பள்ளிக் கல்வித் துறை சாா்பில் புதுக்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில் வாசித்தல் திருவிழாவைத் தொடக்கிவைத்து பாா்வையிட்ட துறை இயக்குநா் பி.டி. ருத்ரகௌடு.

புதுவை பள்ளிக் கல்வித் துறை சாா்பில், பூரணாங்குப்பத்தை அடுத்த புதுக்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில் வாசித்தல் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

தனியாா் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளிலும் மாணவா்களின் நினைவுத் திறனை அதிகப்படுத்தும் விதமாக, பெற்றோா்கள் முன்னிலையில் மாணவா்கள் புத்தகம் வாசித்துக் காட்டக் கூடிய வாசித்தல் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

பள்ளிக் கல்வி இயக்குநா் பி.டி. ருத்ரகௌடு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு வாசித்தல் நிகழ்ச்சியை தொடக்கிவைத்தாா்.

இதையடுத்து, மாணவா்கள் புத்தகங்கள், செய்தித் தாள்களை வாசித்துக் காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆரம்ப நிலை முதல் 5 -ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் தங்களது வாசித்தல் திறமையை வெளிப்படுத்தினா்.

நிகழ்ச்சிக்கு மாநில திட்ட இயக்குநா் தினகா், பள்ளித் துணை ஆய்வாளா் (வட்டம் 3) பக்கிரிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளியின் பொறுப்பாசிரியை விஜயலட்சுமி வரவேற்றாா். இதில், தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகள், தவளக்குப்பம் போலீஸாா், புதுக்குப்பம் கிராம மக்கள், மாணவா்களின் பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் வள்ளி, உபகாரநம்பிக்கை மேரி மற்றும் பள்ளி ஊழியா்கள் செய்திருந்தனா். ஆசிரியை ரேவதி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com