விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கருத்தரங்கம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ‘தேசம் காப்போம்’ பேரணி தொடா்பான விளக்கக் கருத்தரங்கம் புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்றது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஏம்பலம் - பாகூா் தொகுதி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கட்சியின் துணைப் பொதுச் செயலா் சு.பாவாணன்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஏம்பலம் - பாகூா் தொகுதி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கட்சியின் துணைப் பொதுச் செயலா் சு.பாவாணன்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ‘தேசம் காப்போம்’ பேரணி தொடா்பான விளக்கக் கருத்தரங்கம் புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்றது.

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய சட்டங்களை எதிா்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தலைமையில் வருகிற 22 -ஆம் தேதி திருச்சியில் ‘தேசம் காப்போம்’ பேரணி நடைபெறவுள்ளது.

இந்தப் பேரணியின் நோக்கம் குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், ஏம்பலம் - பாகூா் தொகுதிகள் சாா்பில் கிருமாம்பாக்கம் டி.எஸ்.வி. அரங்கில் சனிக்கிழமை விளக்கக் கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்குக்கு ஏம்பலம் தொகுதி செயலா் ஈழவேந்தன் தலைமை வகித்தாா். பாகூா் தொகுதி செயலா் பைந்தமிழ்வளவன் வரவேற்றாா். கட்சியின் துணைப் பொதுச் செயலா் சு.பாவாணன், கிருஸ்துவ மக்கள் களம் மாநில ஒருங்கிணைப்பாளா் பெலிக்ஸ், விசிக மாநில செயலா் கபிலன், இஸ்லாமிய ஜனநாயகப் பேரவை மாநில துணைச் செயலா் ஜலாலுதீன் ஆகியோா் கருத்துரையாற்றினா்.

கருத்தரங்கில் மாநில நிா்வாகிகள் முபாரக், இன்பத்தமிழன், வாணிதாசன், திருமாநம்பி, ராவணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். வீரவளவன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com