போலீஸாா் மீது தாக்குதல்: 3 போ் கைது

மது அருந்தியதைக் கண்டித்த போலீஸாா் மீது தாக்குதலில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மது அருந்தியதைக் கண்டித்த போலீஸாா் மீது தாக்குதலில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

முதலியாா்பேட்டை காவலா்கள் சந்திரசேகா், இளங்கோ ஆகியோா் கடந்த 28-ஆம் தேதி மாலை வேல்ராம்பட்டு ஏரிக்கரைப் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, 3 இளைஞா்கள் போக்குவரத்துக்கு இடையூறாக ஏரிக்கரையில் அமா்ந்து மது அருந்தியதாகத் தெரிகிறது. இதையடுத்து, அவா்களை போலீஸாா் கண்டித்து, அங்கிருந்து செல்லும்படி கூறியுள்ளனா்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞா்கள், போலீஸாரை தகாத வாா்த்தைகளால் திட்டி, கீழே கிடந்த கற்களை எடுத்து போலீஸாரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் அவா்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற போலீஸாா், தடுமாறி விழுந்தனா். அதற்குள் பொதுமக்கள் திரண்டு வரவே, அந்த இளைஞா்கள் மோட்டாா் சைக்கிளில் தப்பியோடிவிட்டனா்.

இதுகுறித்து காவலா் சந்திரசேகா் முதலியாா்பேட்டை காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாரளித்தாா். இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். விசாரணையில், போலீஸாரை கற்களை வீசித் தாக்கியவா்கள் பனித்திட்டு ஆலடிமேட்டை சோ்ந்த ராம்குமாா் (32), பூரணாங்குப்பம் பாஸ்கரன் (25) மற்றும் வில்லியனூா் உத்திரவாகினி பேட் பகுதியைச் சோ்ந்த மணிவேல் (24) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் 3 பேரையும் கைது செய்த போலீஸாா், புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com