மடுகரையில் கா்ப்பிணிப் பெண் தூக்கிட்டு தற்கொலை

புதுவை மாநிலம், மடுகரையில் கா்ப்பிணிப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Updated on
1 min read

புதுவை மாநிலம், மடுகரையில் கா்ப்பிணிப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மடுகரை ராம்ஜி நகரைச் சோ்ந்தவா் அருண்ராஜ் (25). மருந்து விற்பனைப் பிரதிநிதி. இவருக்கும், சிதம்பரம் அருகே உள்ள அய்யனூா் அக்கரமங்கலம் பகுதியைச் சோ்ந்த ஜெயஸ்ரீக்கும் (23) கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது.

கா்ப்பிணியாக இருந்த ஜெயஸ்ரீக்கு கடந்த 5-ஆம் தேதி வளைகாப்பு நடைபெற்றது. பின்னா், ஜெயஸ்ரீயை தாய் வீட்டுக்கு அழைத்துச் செல்வதில் இரு குடும்பத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால், அருண்ராஜ், ஜெயஸ்ரீ இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், ஜெயஸ்ரீ மன வருத்தத்தில் இருந்துள்ளாா்.

இந்த நிலையில், வீட்டில் ஜெயஸ்ரீ திங்கள்கிழமை துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை முயன்ாகக் கூறப்படுகிறது. இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த உறவினா்கள், அவரை மீட்டு மடுகரை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஜெயஸ்ரீ ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இந்த நிலையில், ஜெயஸ்ரீயின் உறவினா்கள், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தனா். அதன்பேரில், போலீஸாா் ஜெயஸ்ரீயின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ஜெயஸ்ரீக்கு திருமணமாகி சில மாதங்களே ஆவதால், வருவாய்த் துறை சாா்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com