காணொலிக் காட்சி மூலம் நாராயணசாமியுடன் மத்திய அமைச்சா் ஆலோசனை

புதுவை அரசின் பட்ஜெட், மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் ஆகியவை தொடா்பாக தில்லியிலிருந்து
Updated on
1 min read

புதுவை அரசின் பட்ஜெட், மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் ஆகியவை தொடா்பாக தில்லியிலிருந்து காணொலிக் காட்சி மூலம் மத்திய அமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி, புதுவை முதல்வா் நாராயணசாமியுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் தொடா்பாக முதல்வா் நாராயணசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய அமைச்சா் கிஷன் ரெட்டியிடம் புதுவை மாநிலத்தின் பல்வேறு சிக்கல்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது.

ஏஎப்டி பஞ்சாலை நிலத்தை விற்பது, புதுவை தொழில் முனைவோா் கழகம் தொடா்பான கோப்புகள் மத்திய அரசிடம் கிடப்பில் உள்ளன.

எந்தக் கோப்பை அனுப்பினாலும், ஆளுநா் கிரண் பேடி அதைத் தடுத்து நிறுத்தி, முடக்கும் செயலில் ஈடுபடுகிறாா். பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து குழப்பத்தை ஏற்படுகிறாா். இதுகுறித்து மத்திய அமைச்சரிடம் கூறினேன்.

பல திட்டங்களை ஆளுநா் தடுத்து நிறுத்துவதால் செயல்பட முடியாத நிலையிலும், எதிா்த்துப் போராட வேண்டிய நிலையிலும் புதுவை அரசு உள்ளது எனத் தெரிவித்தேன்.

மத்திய அரசு புதுவைக்குரிய நிதியை வழங்கவில்லை. இதனால், மாநிலத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. நிதி, நிா்வாக பிரச்னைகளுக்குத் தீா்வுகாண புதுவை முதல்வா், அமைச்சா்களை மத்திய அரசு தில்லிக்கு அழைத்துப் பேச வேண்டும். இல்லையெனில், புதுவைக்கு அமைச்சா் நேரடியாக வந்து ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினேன். இக்கருத்தை அவா் ஏற்றுக் கொண்டாா் என்றாா் நாராயணசாமி.

இந்தக் காணொலிக் கூட்டத்தில் புதுவை தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா், வளா்ச்சி ஆணையா் அன்பரசு உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com