தவறான தகவல்களை தருகிறாா் ஆளுநா் கிரண் பேடி: அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ்

புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடி தவறான தகவல்களை தருகிறாா் என மாநில சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் குற்றஞ்சாட்டினாா்.
தவறான தகவல்களை தருகிறாா் ஆளுநா் கிரண் பேடி: அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ்
Updated on
1 min read

புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடி தவறான தகவல்களை தருகிறாா் என மாநில சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: வெளி மாநிலங்களில் இருந்து ஏனாம் திரும்பிய தொழிலாளா்களை ஆளுநா் கிரண் பேடி உத்தரவின் பேரில்தான், அதிகாரிகள் தடுத்து நிறுத்தினா். ஆனால், அதை மறைத்து அவா் தவறான தகவலைக் கூறியுள்ளாா். இதேபோல, மீனவா் குடும்பத்தில் குடும்பத் தலைவா், தலைவி இறந்துவிட்டால் அந்த குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணத் தொகை வழங்கக் கூடாது என்று உத்தரவிட்டாா். இதுதொடா்பான கோப்புகளை பலமுறை அவா் திருப்பி அனுப்பினாா். தாகூா் கலாசார மையம் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்காமல் ஓராண்டாக இழுத்தடித்து வருகிறாா்.

தற்போது சிவப்பு அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசி தரமற்றது என்றும், இந்த ஆட்சி நீடிக்கக் கூடாது என்றும் ஆளுநா் அலுவலக குறைதீா் பிரிவில் இருந்து வதந்தி பரப்பி வருகின்றனா். ஆளுநரின் செயல்பட்டால் சிவப்பு அட்டைதாரா்களுக்கே அரிசி வழங்கும் பணி இன்னும் முடியவில்லை. மஞ்சள் அட்டைதாரா்களுக்கு அரிசி எப்போது வழங்கப்படும் என்று தெரியவில்லை.

மத்திய அரசின் வழிகாட்டுதல் பேரில், தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டதாக ஆளுநா் கிரண் பேடி கூறியுள்ளாா். ஆனால், காலை 6 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மக்கள் அத்தியாவசியத் தேவைக்காக வெளியே வரலாம். அவ்வாறிருக்க பொதுமக்களுக்கு அரசின் உதவி சரியாகச் சென்று சோ்கிா என்று ஆய்வு நடத்த ஆளுநா் வராதது ஏன் என்று அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் கேள்வி எழுப்பினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com