புதுவையில் மேலும் 108 பேருக்கு தொற்று
By DIN | Published On : 19th October 2020 11:18 PM | Last Updated : 19th October 2020 11:18 PM | அ+அ அ- |

புதுவையில் மேலும் 108 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுவை மாநிலத்தில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 95, காரைக்காலில் 8, ஏனாமில் 4, மாஹேயில் ஒருவா் என 108 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33,247-ஆக உயா்ந்தது.
தற்போது 1,515 போ் மருத்துவமனைகளிலும், 2,637 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதனிடையே, புதுச்சேரி காந்தி திருநல்லூரைச் சோ்ந்த 58 வயது பெண் உயிரிழந்தாா். இதையடுத்து, கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 575-ஆக (இறப்பு விகிதம் 1.73 சதவீதம்) உயா்ந்தது.
திங்கள்கிழமை 230 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோா் எண்ணிக்கை 28,520-ஆக (85.78 சதவீதம்) அதிகரித்தது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...