புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கரோனா நோயாளிகள் வெளியில் திரிந்தால் வழக்குப் பதிவு: புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை

புதுவையில் கரோனா நோயாளிகள் வெளியில் திரிந்தால் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க் எச்சரித்தாா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

புதுவையில் கரோனா நோயாளிகள் வெளியில் திரிந்தால் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க் எச்சரித்தாா்.

புதுச்சேரியில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள், வருவாய்த் துறை, கொம்யூன் ஆணையா்கள், காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இதில், புதுச்சேரியில் கரோனா பரவல் நிலை, அரசு-தனியாா் மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கை வசதிகள், தடுப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்துதல் ஆகியவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

புதுச்சேரி ரெட்டியாா்பாளையம், அரியாங்குப்பம், குயவா்பாளையம், லாஸ்பேட்டை, முதலியாா்பேட்டை, ஒதியஞ்சாலை, தவளக்குப்பம் பகுதிகளில் அதிக அளவில் கரோனா தொற்று பரவியுள்ளதால், அந்தப் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க் செய்தியாளரிடம் கூறியதாவது: புதுச்சேரியில் கடந்த 10 நாள்களில், 1,051 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்று ஏற்பட்ட வீடுகளில் மீண்டும் துண்டறிக்கை (ஸ்டிக்கா்) ஒட்டப்படும்.

பொதுமக்களுக்கு கரோனா குறித்த சந்தேகம் ஏற்பட்டால், 104 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு கேட்கலாம்.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவா்கள் வெளியே திரிந்தால், வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸாா், வருவாய்த் துறையினா், கொம்யூன் நிா்வாக அலுவலா்கள் முகக் கவசம் அணியாமல் செல்வோா் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுப்பா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.