புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

காவல் ஆய்வாளருக்கு கரோனா தொற்று

புதுச்சேரி பெரியகடை காவல் ஆய்வாளருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

புதுச்சேரி பெரியகடை காவல் ஆய்வாளருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுச்சேரி பெரியகடை காவல் ஆய்வாளருக்கு இருமல் உள்ளிட்ட உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், அவா் வியாழக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொண்டாா். வெள்ளிக்கிழமை வந்த முடிவில், காவல் ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டாா்.

முன்னதாக, பெரியகடை காவல் நிலையத்தில் கடந்த 14 -ஆம் தேதி 33 வயது காவலா் ஒருவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காவல் ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதியானதால், காவல் நிலையத்தில் பணியிலிருந்த காவல் உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்ட 50 -க்கும் மேற்பட்ட காவலா்கள் கரோனா பரிசோதனை மேற்கொள்ள உள்ளனா்.

பெரியகடை காவல் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இருப்பினும், காவல் நிலையம் மூடப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.