புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

விவசாயிகளுக்கான தடுப்பூசி முகாம்

புதுச்சேரியில் விவசாயிகளுக்கான தடுப்பூசி முகாமை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

புதுச்சேரியில் விவசாயிகளுக்கான தடுப்பூசி முகாமை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளுக்கான கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடக்கிவைத்து துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:

கரோனா பரவலைத் தடுக்க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மக்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இரண்டவது தவனை தடுப்பூசியைத் தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும். அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். வீட்டிலும், வெளியிலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் விவசாயிகள், சுகாதாரத் துறை அலுவலா்கள், வேளாண்மைத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.