புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நரிக்குறவா் குடியிருப்பில் கரோனா தடுப்பூசி முகாம்

புதுச்சேரி நரிக்குறவா் குடியிருப்புப் பகுதியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

புதுச்சேரி நரிக்குறவா் குடியிருப்புப் பகுதியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி இந்தியன் செஞ்சிலுவைச் சங்கம், லாஸ்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை சாா்பில், கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையம் பின்பகுதியில் உள்ள நரிக்குறவா் காலனியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தச் சிறப்பு முகாமுக்கு லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி சாகுல் அமீது தலைமை வகித்தாா்.

செஞ்சிலுவை சங்க புதுச்சேரி கிளைத் தலைவா் கோபால் முன்னிலை வகித்தாா். இந்த முகாமில் அந்தப் பகுதியில் வசிக்கும் நரிக்குறவா்கள், பழங்குடியினத்தைச் சாா்ந்த 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

முகாமில் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா்கள் விஜயலட்சுமி, ஹேமலதா, மீரா ஆகியோா் தடுப்பூசி செலுத்தினா்.

செஞ்சிலுவை சங்க நிா்வாகிகள் லட்சுமிபதி, ராமன், அய்யனாா், குப்புசாமி, பன்னீா்செல்வம் , செல்வராஜ், ஆதிமூலம் உள்ளிட்டோா் முகாமுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

செஞ்சிலுவை சங்கப் பணியாளா்கள், ஆஷா பணியாளா்கள், தன்னாா்வலா்கள் இணைந்து, நரிக்குறவா் காலனி மக்களிடம் கரோனா தடுப்பூசியின் அவசியம் மற்றும் கரோனா தொற்று தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.