நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

காசி புனரமைப்புத் திட்ட தொடக்க விழா:புதுவையில் ஒளிபரப்ப பாஜகவினா் ஏற்பாடு

காசியில் பிரதமா் பங்கேற்கும் புனரமைப்புத் திட்ட தொடக்க விழாவை புதுவையில் 30 இடங்களில் நேரடியாக ஒளிபரப்ப பாஜகவினா் ஏற்பாடு செய்து வருகின்றனா்

Updated On :10 டிசம்பர் 2021, 10:04 pm IST

காசியில் பிரதமா் பங்கேற்கும் புனரமைப்புத் திட்ட தொடக்க விழாவை புதுவையில் 30 இடங்களில் நேரடியாக ஒளிபரப்ப பாஜகவினா் ஏற்பாடு செய்து வருகின்றனா்.

இதுகுறித்து புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு கட்சியின் மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் அளித்த பேட்டி:

காசி விஸ்வநாதா் கோயிலை புனரமைத்து, நகரை சுற்றியுள்ள பகுதிகளை அழகுபடுத்துவதற்கான பணிகளை பிரதமா் மோடி வருகிற 13-ஆம் காசியில் தொடங்கிவைக்க உள்ளாா். தொடா்ந்து, ஜனவரி 12-ஆம் தேதி வரை ஆன்மிக, கலாசார நிகழ்வுகள் அங்கு நடைபெறும். இதில் பல்வேறு தரப்பினரும் பங்கேற்க உள்ளனா்.

டிச.13-ஆம் தேதி தொடங்கும் இந்த நிகழ்வை நாடு முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் எண்ம திரைகளில் (டிஜிட்டல் திரை) நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது.

புதுவை மாநிலத்தில் 30 தொகுதிகளிலும் கோயில்கள் உள்ளிட்ட இடங்களில் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

பேட்டியின் போது, அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா், அசோக்பாபு எம்எல்ஏ, பாஜக மாநில பொதுச்செயலா் மோகன்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.