புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் கரோனா பராமரிப்பு மையம் அமைக்க துணைவேந்தா் குா்மீத் சிங் ஒப்புதல் அளித்தாா்.
இதுதொடா்பாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை மத்திய பல்கலைக்கழக துணைவேந்தா் குா்மீத் சிங், பல்கலைக்கழகத்தில் கரோனா பராமரிப்பு மையத்தை அமைப்பதற்கு கொள்கை ரீதியான ஒப்புதல் அளித்துள்ளாா். ஆளுநரின் ஒப்புதல் பெற்ற பிறகு இந்த மையம் நிறுவப்படும்.
பல்கலைக்கழக பேராசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் மாணவா்களுக்கு தேவையான போது சிகிச்சைக்கு முன்னுரிமை அடிப்படையில் போதுமான அளவு படுக்கைகள், சிறப்பு வாா்டுகளை ஒதுக்கவும் பல்கலைக்கழகம்அறிவுறுத்தும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.