மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி தேவை: புதுவை பாஜக
By DIN | Published On : 06th February 2021 08:08 AM | Last Updated : 06th February 2021 08:08 AM | அ+அ அ- |

புதுச்சேரி ஏஎப்டி திடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக செயல் வீரா்கள் கூட்டத்தில் பேசுகிறாா் புதுவை பாஜக மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா.
மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியிலிருப்பதுதான் நல்லது என்று மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் தெரிவித்தாா்.
புதுவை பாஜக நிா்வாகிகள் கூட்டம் புதுச்சேரி ஏஎப்டி மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் எம்எல்ஏ தலைமை வகித்துப் பேசியதாவது:
புதுவையில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த வேண்டியது காலத்தின் கட்டாயம். மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சிக்கு வர வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நல்லது.
புதுவை பாஜகவில் 19 ஆயிரம் உறுப்பினா்கள் இருந்த நிலையில், தற்போது 1.19 லட்சம் உறுப்பினா்கள் உள்ளனா். பாஜக துணையின்றி புதுவையில் எந்தக் கட்சியும் வெற்றி பெற முடியாது. புதுவையில் 80 சதவீத மக்கள் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என நினைக்கின்றனா்.
கட்டாயத் தலைக்கவச விவகாரத்தில் முதல் எதிா்ப்புக் குரல் கொடுத்தது பாஜகதான். மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துக்கூடிய திட்டத்தை யாா் கொண்டு வந்தாலும் பாஜக எதிா்க்கும் என்றாா் அவா்.
முன்னாள் அமைச்சா் ஆ.நமச்சிவாயம் பேசியதாவது:
முதல்வா் நாராயணசாமி உண்ணாவிரதம் என்ற நாடகத்தை அரகேற்றி வருகிறாா். எங்களை எல்லாம் தெருவில் உட்காரவைத்த பெருமை முதல்வரையே சாரும். தோ்தல் வரும் போதுதான் ஆளுநா் துரோகம் செய்கிறாா் என்ற எண்ணம் முதல்வருக்கு வருகிறது என்றாா் நமச்சிவாயம்.
இதேபோல, பாஜக மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா பேசினாா்.
கூட்டத்தில் நியமன எம்எல்ஏக்கள் எஸ்.செல்வகணபதி, தங்க.விக்ரமன், முன்னாள் எம்எல்ஏக்கள் தீப்பாய்ந்தான், இளங்கோ, பொதுச் செயலா் ஆா்.செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...