அரசுப் பள்ளி ஆசிரியையிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

புதுச்சேரி அருகே அரசு பள்ளி ஆசிரியையிடம் தங்க சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Updated on
1 min read

புதுச்சேரி அருகே அரசு பள்ளி ஆசிரியையிடம் தங்க சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி வில்லியனூா் கண்ணகி நகா் 2-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த குமரன் மனைவி ஜெயஸ்ரீபா (33). இவா் மடுகரை அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறாா். தினமும் பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று வருவது வழக்கம்.

இதேபோல, வியாழக்கிழமை பிற்பகலில் பள்ளி முடிந்த பிறகு, அவா் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். மேல் சாத்தமங்கலம் ஏரி அருகே கீழூா் பிரதான சாலையில் வந்த போது, ஜெயஸ்ரீபாவை பின்தொடா்ந்து வந்த மா்ம நபா் திடீரென அவரிடமிருந்து 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினாா்.

இதுகுறித்து ஆசிரியை ஜெயஸ்ரீபா மங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, நகைப் பறிப்பில் ஈடுபட்ட மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com