பிப். 22-இல் புதுவை சிறப்புப் பேரவைக் கூட்டம்

புதுவை சட்டப்பேரவையில் சிறப்புக் கூட்டம் வருகிற 22-ஆம் தேதி நடைபெறுகிறது.
Updated on
1 min read

புதுவை சட்டப்பேரவையில் சிறப்புக் கூட்டம் வருகிற 22-ஆம் தேதி நடைபெறுகிறது.

புதுவை ஆளும் காங்கிரஸ் அரசு திங்கட்கிழமை (பிப். 22) தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், சிறப்பு சட்டப்பேரவை கூடுவதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

இதுதொடா்பாக புதுவை சட்டப்பேரவைச் செயலா் முனிசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை 14-ஆவது சட்டப்பேரவையின் 4-ஆவது கூட்டத் தொடரின் சிறப்புப் பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை (பிப். 22) காலை 10 மணிக்கு கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவைத் தலைவா் உத்தரவுப்படி அனைத்து உறுப்பினா்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com