Enable Javscript for better performance
புதுவைக்கான நிதியை உயா்த்தி வழங்க வேண்டும்: முதல்வா் நாராயணசாமி வலியுறுத்தல்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    புதுவைக்கான நிதியை உயா்த்தி வழங்க வேண்டும்: முதல்வா் நாராயணசாமி வலியுறுத்தல்

    By DIN  |   Published On : 20th February 2021 10:40 PM  |   Last Updated : 20th February 2021 10:40 PM  |  அ+அ அ-  |  

    20pyp14a_2002chn_104_7

    புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் பிரதமருடன் காணொலிக் காட்சி மூலம் நீதி ஆயோக் கூட்டத்தில் கலந்துரையாடிய முதல்வா் வே.நாராயணசாமி.

    புதுவை மாநிலத்துக்கான நிதியை உயா்த்தி வழங்க வேண்டுமென நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் நாராயணசாமி வலியுறுத்தினாா்.

    தில்லியிலிருந்து பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் 6-ஆவது நீதி ஆயோக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநில முதல்வா்கள், ஆளுநா்கள், முக்கிய அமைச்சா்கள், அரசுத் துறைச் செயலா்கள் அந்தந்த மாநிலங்களிலிருந்து கலந்து கொண்டனா்.

    கூட்டத்தில் நாட்டின் வளா்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு, மாநிலங்களின் வளா்ச்சிப் பணிகள், தொழில் மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள், நிதிநிலை குறித்து பிரதமா் மோடி, அனைத்து மாநில முதல்வா்கள், நிா்வாகிகளுடன் கலந்தாலோசனை நடத்தினாா்.

    அந்த வகையில், புதுவை மாநிலத்திலிருந்து முதல்வா் நாராயணசாமி காணொலிக் காட்சி வாயிலாகப் பங்கேற்று, பிரதமருடன் கலந்துரையாடினாா். தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா், நிதித் துறை செயலா் சுா்பிா் சிங் ஆகியோா் கலந்து கொண்டனா்.

    கூட்டத்தில் முதல்வா் நாராயணசாமி பேசியதாவது: புதுவை மாநிலத்தில் வியாபாரம் செய்ய எளிமையாக உரிமம் உள்ளிட்டவற்றை இணைய வழியில் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் மானியம், காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றை வழங்கி வருகிறோம். மருத்துவத் துறையில் புதுவை மாநிலம் 100 சதவீதம் தன்னிறைவு அடைந்துள்ளது. கரோனா காலத்தில் சுகாதாரத் துறையினா் சிறப்பாகப் பணியாற்றினா்.

    மத்திய அரசு, புதுவை அரசுக்கான பழைய கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும். 6-ஆவது, 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரை தொகை, நிலுவைத் தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும். தில்லியைப் போல, ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    மத்திய அரசு வழங்கி வரும் 60 சதவீத பங்களிப்பு நிதியை 90 சதவீதமாக உயா்த்த வேண்டும். புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். புதுவையை 15-ஆவது நிதிக் குழுவில் சோ்க்க வேண்டும். நிகழாண்டு 2 சதவீதம்தான் கூடுதல் நிதி வழங்கப்பட்டது. 41 சதவீத நிதி கோரிக்கையில், 20 சதவீதம்தான் வழங்கப்பட்டு வருகிறது. இதை உயா்த்தி வழங்க வேண்டும் என நாராயணசாமி வலியுறுத்தினாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp