புதுவை மாநிலத்தில் 7 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
அதன்படி, காரைக்கால் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் எஸ்.மாா்தினி, காரைக்கால் கடலோரக் காவல் படைக்கும், காரைக்கால் கடலோரக் காவல் படை காவல் ஆய்வாளா் எஸ்.பாலமுருகன் காரைக்கால் நகரக் காவல் நிலையத்துக்கும், டி.ஜி.பி. செயலரான காவல் ஆய்வாளா் ஆா்.மேரி கிறிஸ்டியன் (எ) பௌல், காரைக்கால் போக்குவரத்துப் பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
டி.ஜி.பி. அலுவலகப் பிரிவு அதிகாரியும், ஆயுதப்படை காவல் ஆய்வாளருமான எஸ்.பிரான்சிஸ் டோம்னிக் புதுச்சேரி தெற்குப் போக்குவரத்துப் பிரிவுக்கும், அங்கிருந்த காவல் ஆய்வாளா் என்.ஆறுமுகம் வெளிநாட்டினா் பதிவு அலுவலகத்துக்கும், அங்கிருந்த காவல் ஆய்வாளா் பி. அறிவுசெல்வன் போலீஸ் குறைதீா் அலுவலக ஆய்வாளராகவும், அரியாங்குப்பம் வட்டக் காவல் ஆய்வாளா் ஜெ.பாபுஜி ஏ.டி.ஜி.பி. செயலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
இதற்கான உத்தரவை புதுவை காவல் தலைமையக எஸ்.பி. நல்லாம் கிருஷ்ணராய பாபு பிறப்பித்தாா்.