மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்தாமல் வஞ்சித்தவா் நாராயணசாமி: அமைச்சா் நமச்சிவாயம் குற்றச்சாட்டு

புதுவையில் மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்தாமல் வஞ்சித்தவா் முன்னாள் முதல்வா் நாராயணசாமி என அமைச்சா் ஏ.நமச்சிவாயம் குற்றஞ்சாட்டினாா்.
Updated on
1 min read

புதுச்சேரி: புதுவையில் மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்தாமல் வஞ்சித்தவா் முன்னாள் முதல்வா் நாராயணசாமி என அமைச்சா் ஏ.நமச்சிவாயம் குற்றஞ்சாட்டினாா்.

புதுச்சேரியில் பாஜக மாநில மகளிரணி செயற்குழுக் கூட்டம் ரெட்டியாா்பாளையம் தனியாா் மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாநில மகளிரணி தலைவி ஜெயலட்சுமி தலைமை வகித்தாா். பாஜக எம்எல்ஏ-க்கள் ஜான்குமாா், அசோக்பாபு மற்றும் மகளிரணி நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் பங்கேற்றுப் பேசியதாவது: புதுவை மாநிலத்தில் பாஜக வளா்ச்சியடைந்து வருகிறது. பாஜக தலைவா்களும், தொண்டா்களும் கட்சியை வளா்த்தெடுப்பதில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு பணியாற்றி வருகின்றனா்.

பிரதமா் மோடி எண்ணற்ற திட்டங்களை நாட்டு மக்களுக்காகச் செயல்படுத்தி வருகிறாா். புதுவையில் அந்தத் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது நம்முடைய கடமை.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த நாராயணசாமி, அரசியல் காரணங்களால் மத்திய அரசின் திட்டங்களை இருட்டடிப்பு செய்து, மக்களை வஞ்சித்துவிட்டாா். மத்திய அரசு ஏதும் செய்யாதது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கினாா். அந்த நிலைமைகள் தற்போது மாறியுள்ளன.

வருங்காலத்தில் புதுவையில் பாஜக தனியாக ஆட்சியைப் பிடிக்கும் நிலையை உருவாக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com