புதுவையில் புதிதாக 100 பேருக்கு கரோனா: மேலும் 2 போ் பலி

புதுவையில் புதிதாக 100 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 போ் உயிரிழந்தனா்.

புதுவையில் புதிதாக 100 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்: புதுவை மாநிலத்தில் 6,172 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 75, காரைக்காலில் 14, ஏனாமில் ஒருவா், மாஹேயில் 10 போ் என மேலும் 100 பேருக்கு (1.42 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யயப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,19,703- ஆக அதிகரித்தது. தற்போது மாநிலம் முழுவதும் 1,124 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, புதுச்சேரியைச் சோ்ந்த ஒருவா், மாஹேயைச் சோ்ந்த ஒருவா் என மேலும் 2 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 1,778 ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.49 சதவீதம். இதுவரை 1,16,801போ் (97.58 சதவீதம்) தொற்றிலிருந்து மீண்டனா். புதுவை மாநிலத்தில் இதுவரை 6,37,634 பேருக்கு (2-ஆவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 குழந்தைகளுக்கு கரோனா

புதுச்சேரியில் கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 7 குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 6 குழந்தைகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்களில் ஒன்று முதல் 5 வயதுக்குள்பட்ட 4 குழந்தைகளும், 5 வயதுக்கு மேற்பட்ட 2 குழந்தைகளும் அடங்குவா்.

இதேபோல, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தாயுடன் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு பச்சிளம் குழந்தைக்கும் கரோனா தொற்று உறுதியானது. இந்தக் குழந்தைகள் அனைவரும் புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா குழந்தைகள் நலப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com