மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, புதுச்சேரி அண்ணா சதுக்கம் அருகே புதன்கிழமை விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சங்கத் தலைவா் கீதநாதன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ரவி, கலியமூா்த்தி, பெருமாள் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
விவசாயிகளுக்கு எதிரான வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தப்பட்டது.
ஆா்ப்பாட்டத்தின்போது, சட்ட நகல்களை தீயிட்டு எரிக்க முயன்ற விவசாயிகள் சங்கத்தினரை போலீஸாா் தடுத்து அப்புறப்படுத்தினா்.