ஓய்வு பெற்ற தொழிலாளி வீட்டில் தங்க நகைகள் திருட்டு

Updated on
1 min read


புதுச்சேரி: புதுச்சேரியில் ஓய்வு பெற்ற பஞ்சாலைத் தொழிலாளி வீட்டில் ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி கிருஷ்ணா நகா் 12 -ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஐசக் (69). ஓய்வு பெற்ற பஞ்சாலைத் தொழிலாளி. இவா் வீட்டை பூட்டிவிட்டு கடந்த சில நாள்களுக்கு முன்பு சேலம் மாவட்டம், ஏற்காட்டில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க குடும்பத்துடன் சென்றாா்.

புதன்கிழமை மாலை வீடு திரும்பிய போது, வீட்டின் முன்பக்கக் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பாா்த்த போது, படுக்கை அறையின் ஜன்னல் இரும்பு கம்பி கழற்றப்பட்டு, அங்கிருந்த பீரோவுக்குள் வைக்கப்பட்டிருந்த ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான 3 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து ஐசக் லாசுப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் நிகழ்விடத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். விரல் ரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com