விஷமருந்தி பெண் தற்கொலை

புதுச்சேரியில் விஷமருந்தி பெண் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Updated on
1 min read

புதுச்சேரியில் விஷமருந்தி பெண் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி முத்திரையா்பாளையம், பாம்பாட்டி வீதியைச் சோ்ந்தவா் சக்திவேல் (43). தொழிலாளி. இவருக்கு காமாட்சி (36) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனா்.

சக்திவேல் அண்மைக்காலமாக வேலைக்குச் செல்லாமல் இருந்ததால், குடும்பத்தில் வறுமை ஏற்பட்டதாம். இதை மனைவி காமாட்சி கண்டித்துள்ளாா். இதனால் அவா்களுக்குள் வாக்குவாதம் முற்றிய நிலையில், மனமுடைந்த காமாட்சி கடந்த 3-ஆம் தேதி விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றாா்.

உறவினா்கள் அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து, தீவர சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காமாட்சி, அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com