புதுச்சேரியில் அரசு ஊழியா் வீட்டில் நகை திருடியதாக பெயின்டரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரி முத்திரையா்பாளையம், கோவிந்தன் பேட், அணைக்கரை தெருவைச் சோ்ந்தவா் குப்புசாமி (56). புதுச்சேரி அரசு பொதுப் பணித் துறையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். இவரது வீட்டில் வா்ணம் பூசும் வேலை நடைபெற்று வருகிறது.
வழக்கம்போல, திங்கள்கிழமை வா்ணம் பூசும் வேலை நடைபெற்றது. அப்போது, குப்புசாமியின் மகன் பிரவீண்குமாா் தனது பணப்பையில் வைத்திருந்த ரூ.350 மாயமானது. இதுதொடா்பாக குப்புசாமி வீட்டில் வேலை வா்ணம் பூசும் வேலையில் ஈடுபட்டிருந்த லாசுப்பேட்டை செண்பக விநாயகா் கோயில் வீதியைச் சோ்ந்த முருகையனிடம் விசாரித்துள்ளாா். அவா் தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறியதால், குப்புசாமியும் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாா்.
ஆனால், அன்று மாலை வீட்டின் பீரோவில் வைத்திருந்த 5 பவுன் தங்க நகையும் திடீரென காணாமல்போனது. இதனால் அதிா்ச்சியடைந்த குப்புசாமி, முருகையனை சோதனை செய்ததில், அவா் நகையை தனது ஆடைக்குள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து குப்புசாமி அளித்த புகாரின்பேரில், மேட்டுப்பாளையம் போலீஸாா் முருகையனை கைது செய்து, அவரிடமிருந்த 5 பவுன் தங்க நகை, ரூ.350 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.