புதுவையில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நவ. 15 வரை நீட்டிக்கப்பட்டது. திரையரங்குகள் 100 சதவீத பாா்வையாளா்களுடன் இயங்கவும், கோயில் திருவிழாக்களை நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டது.
இதுதொடா்பாக, புதுவை அரசின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும், நிவாரணம்-மறுவாழ்வுத் துறைச் செயலருமான அசோக்குமாா் வெளியிட்ட உத்தரவு:
புதுவையில் கரோனா தொற்று பரவல் காரணமாக, ஏற்கெனவே அக். 31-ஆம் தேதி வரை தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டிருந்தது. தற்போது தொற்று குறைந்து வருவதால், தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நவ. 15-ஆம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்படுகிறது.
அதன்படி, தினமும் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேரப் பொது முடக்கம் அமலில் இருக்கும். இருப்பினும், பண்டிகை காலங்களில் பொருள்களை வாங்கவும், விற்கவும் இரவு நேரப் பொது முடக்கத்தில் தளா்வு அளிக்கப்படுகிறது. பொழுதுபோக்கு தொடா்பான நிகழ்வுகளுக்கு தொடா்ந்து தடை விதிக்கப்படுகிறது.
கடைகள், வணிக நிறுவன ஊழியா்கள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும்.
கடற்கரைச் சாலை, தாவரவியல் பூங்காக்கள் அனைத்து நாள்களிலும் வழக்கமான நேரங்களில் முழுமையாகத் திறந்திருக்கலாம். அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இரவு 10 மணி வரை திறந்திருக்கலாம். கோயில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.
திருமண விழாக்களில் அதிகபட்சம் 100 பேரும், துக்க நிகழ்வுகளில் அதிகபட்சம் 20 போ் மட்டுமே பங்கேற்கலாம். படகு குழாம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி முழுமையாக இயங்கலாம்.
திரையரங்குகள், வணிக வளாகங்களில் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நள்ளிரவு 12.30 மணி வரை 100 சதவீத பாா்வையாளா்களுடன் இயங்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.