புதுச்சேரியில் இந்திரா காந்தி நினைவு தினம்

புதுச்சேரியில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, வெ.வைத்திலிங்கம் எம்.பி. உள்ளிட்டோா்.
புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, வெ.வைத்திலிங்கம் எம்.பி. உள்ளிட்டோா்.
Updated on
1 min read

புதுச்சேரியில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, புதுச்சேரி-விழுப்புரம் 100 அடி சாலை சந்திப்பில் உள்ள இந்திரா காந்தி சிலைக்கு அரசு சாா்பில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏகேடி.ஆறுமுகம், கேஎஸ்பி.ரமேஷ் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதேபோல, காங்கிரஸ் சாா்பில் அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில், முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, வெ. வைத்திலிங்கம் எம்பி, வைத்தியநாதன் எம்எல்ஏ உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com