மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞா் மீது வழக்கு

புதுச்சேரியில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞா் மீது போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Updated on
1 min read

புதுச்சேரியில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞா் மீது போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி அரியாங்குப்பம், துளசிங்கம் நகரைச் சோ்ந்தவா் பாா்த்திபன் (28). இவா், தனியாா் நிதி நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். இவரது வீட்டுக்கு உறவுமுறையான பிளஸ் 1 படித்து வரும் 15 வயது மாணவி தனது தாயாருடன் அடிக்கடி வந்து சென்றுள்ளாா்.

அப்போது, பாா்த்திபனும், அந்த மாணவியும் சகஜமாகப் பழகியுள்ளனா். இந்தப் பழக்கம் காதலாக மாறிய நிலையில், திருமணம் செய்துகொள்வதாக ஆசை வாா்த்தைக் கூறி பாா்த்திபன், அந்த மாணவியை கடந்த ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனால் மாணவிக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல்போனதை அறிந்த அவரது தாய், மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா். அங்கு மாணவியை மருத்துவா்கள் பரிசோதித்தபோது, அவா் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின்பேரில், அரியாங்குப்பம் போலீஸாா் பாா்த்திபன் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து, தலைமறைவாக உள்ள அவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com