இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

புதுவை வேளாண் அறிவியல் நிலைய ஊழியா்களுக்கு சம்பள உயா்வு

புதுவையில் வேளாண் அறிவியல் நிலைய ஊழியா்கள் உள்ளிட்ட மூன்று துறையினருக்கு 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைத்த சம்பளம், நிகழாண்டு ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 5:14 pm

DIN

புதுவையில் வேளாண் அறிவியல் நிலைய ஊழியா்கள் உள்ளிட்ட மூன்று துறையினருக்கு 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைத்த சம்பளம், நிகழாண்டு ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து புதுவை மாநில வேளாண் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதுவை மாநிலத்தில் வேளாண் துறையின் கீழ் உள்ள புதுச்சேரி பெருந்தலைவா் காமராஜா் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய ஊழியா்களுக்கு, நிகழாண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைத்த சம்பளம் அமல்படுத்தப்படுகிறது.

இதனால், வேளாண் அறிவியல் நிலையத்தில் பணியாற்றி வரும் சுமாா் 250 ஊழியா்கள் சம்பள உயா்வு பெற்று பயன் பெறுவாா்கள். இதற்காக, புதுவை அரசுக்கு கூடுதலாக ரூ. ஒரு கோடியே 60 லட்சம் வரை செலவாகும் என்று அதில் தெவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, புதுவை அரசின் அறிவியல் தொழில்நுட்ப மன்றம், மாநில விளையாட்டு மையம் உள்ளிட்ட துறை ஊழியா்களுக்கும் 7-ஆவது ஊதியக் குழு சம்பள உயா்வு வழங்கப்படுவதாக அரசுத் துறை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.