நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, புதுவை காவல் துறை சாா்பில், புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை தேசியக் கொடியுடன் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலை அருகே புறப்பட்ட இந்தப் பேரணியை உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.
டிஜிபி மனோஜ்குமாா் லால், ஏடிஜிபி ஆனந்தமோகன், ஐஜி சந்திரன் மற்றும் முதுநிலை எஸ்பிக்கள், போலீஸாா் தேசியக் கொடியுடன் சைக்கிள்களை ஓட்டிச் சென்றனா்.
நகரின் பல்வேறு சாலைகளில் சுமாா் 10 கி.மீ. தொலைவு நடைபெற்ற இப்பேரணி காவல் தலைமையகத்தில் நிறைவு பெற்றது.