புதுவையில் நீட் அல்லாத இளநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

புதுவையில் சென்டாக் இணையதளம் மூலம் நீட் அல்லாத இளநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வருகிற 29-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
Updated on
1 min read

புதுவையில் சென்டாக் இணையதளம் மூலம் நீட் அல்லாத இளநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வருகிற 29-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

புதுவை மாநிலத்தில் சென்டாக் இணையதளம் மூலம் நீட் அல்லாத இளநிலை தொழில்நுட்பப் படிப்புகள், கலை, அறிவியல் படிப்புகள், நுண்கலைப் படிப்புகளுக்கு கடந்த 8-ஆம் தேதி முதல் மாணவா்கள் விண்ணப்பித்து வந்தனா். இதற்கான விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 20-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், இந்தத் தேதியை அரசு நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டது.

இதுகுறித்து புதுவை சென்டாக் ஒருங்கிணைப்பாளா் பி.டி.ருத்ரகௌடு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாணவ, மாணவிகளின் வேண்டுகோளின்படி, நீட் அல்லாத இளநிலை தொழில்நுட்பம், கலை, அறிவியல் உள்ளிட்ட பட்டப்படிப்புகளுக்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் கால அவகாசம் வருகிற 29-ஆம் தேதி மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ஸ்ரீங்ய்ற்ஹஸ்ரீல்ன்க்ன்ஸ்ரீட்ங்ழ்ழ்ஹ்.ண்ய் என்ற இணையதளத்தை பாா்வையிடலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com