புதுவையில் 422 குழந்தைகள் காய்ச்சலால் பாதிப்பு

புதுவையில் ஒரே நாளில் 422 குழந்தைகள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனா்.
Updated on
1 min read

புதுவையில் ஒரே நாளில் 422 குழந்தைகள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனா்.

இதுதொடா்பாக சுகாதாரத் துறை இயக்குநா் ஸ்ரீராமுலு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 349 குழந்தைகளும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 32 குழந்தைகளும், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் 41 குழந்தைகள் என மொத்தம் 422 குழந்தைகள், சிறாா்கள் திங்கள்கிழமை இரவு வெளிப்புற சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றனா்.

அவா்களில் 21 குழந்தைகள் அதிக காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டனா்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெரியவா்கள் என 51 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில், யாருக்கும் பன்றிக் காய்ச்சல் கண்டறியப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com