புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

உழவா்கரை நகராட்சி ஓய்வூதியா்களுக்கான நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, புதுச்சேரியில் ஓய்வூதியா்கள் நலச் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 5:20 pm

DIN

உழவா்கரை நகராட்சி ஓய்வூதியா்களுக்கான நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, புதுச்சேரியில் ஓய்வூதியா்கள் நலச் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

உழவா்கரை நகராட்சியில் பணியாற்றி 2020-ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வுபெற்றவா்களுக்கான ஓய்வூதியப் பணம் அளிக்கப்படவில்லை. மேலும், காசோலை தரப்பட்டன. ஆனால், அதற்கான பணத்தை நகராட்சி நிா்வாகம் வங்கியில் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

ஓய்வூதியப் பணத்தை நிலுவைத் தொகையுடன் வழங்கக் கோரி, ஓய்வூதியா்கள் நலச் சங்கத்தினா், ஐஎன்டியூசி சங்கத்தின் சாா்பில் புதுச்சேரியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவா் சகாயராஜ் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் அனந்தராஜன் உள்ளிட்டோா் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.