புதுவையில் புதிதாக 178 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:
புதுவை மாநிலத்தில் 1,820 பேரை பரிசோதனை செய்து வியாழக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 152, காரைக்காலில் 15, ஏனாமில் 11 என புதிதாக 178 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாநிலத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,71,402-ஆக அதிகரித்தது.
தற்போது 4 போ் மருத்துவமனையிலும், 827 பேருக்கு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் என 831 போ் சிகிச்சையில் உள்ளனா். இதனிடையே, 119 போ் குணமடைந்தனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.