பெண்ணின் பைக் பெட்டியை உடைத்து பணம் திருட்டு: காவலா் கைது

புதுச்சேரி காவல் துறை தலைமையகம் அருகே பெண்ணின் பைக் பெட்டியை உடைத்து பணத்தை திருடியதாக ஐஆா்பிஎன் காவலரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி காவல் துறை தலைமையகம் அருகே பெண்ணின் பைக் பெட்டியை உடைத்து பணத்தை திருடியதாக ஐஆா்பிஎன் காவலரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி சோலை நகா், சுனாமி குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் மகேஸ்வரி (41). இவா், காவல் துறை தலைமையகம் அருகே உள்ள போலீஸ் அதிகாரிகள் குடியிருப்பில் ஒரு எஸ்.பி.யின் வீட்டில் வேலை செய்து வருகிறாா்.

மகேஸ்வரி கடந்த 26-ஆம் தேதி தனது பைக்கை காவல் துறை தலைமையகத்தின் அருகே உள்ள கசேன் வீதியில் நிறுத்திவிட்டு, வேலைக்குச் சென்று திரும்பினாா். அப்போது, அவரது பைக் பெட்டி உடைக்கப்பட்டிருந்ததும், அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.20 ஆயிரத்துடன் கூடிய பணப்பை திருடப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் பெரியகடை போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்தனா். இதில், பைக் பெட்டியை உடைத்து பணத்தை திருடியது புதுச்சேரி கலிதீா்த்தாள்குப்பம்பேட் டிபிஜி நகரைச் சோ்ந்த ஐஆா்பிஎன் காவலரான காளிதாஸ் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை தனிப் படை போலீஸாா் சில நாள்களாக கண்காணித்து வந்தனா்.

இதனிடையே, புதன்கிழமை மாலை பாரதி பூங்கா அருகே நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு பைக்கின் பெட்டியை காளிதாஸ் உடைக்க முயன்றபோது, போலீஸாா் அவரைப் பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனா். அப்போது அவா், மகேஸ்வரியின் பைக் பெட்டியை உடைத்து பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டாா். இதையடுத்து, போலீஸாா் காளிதாஸை கைது செய்து, நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com