புதுவை எம்எல்ஏ மகன் மாயம்

புதுச்சேரி அருகே வீட்டை விட்டுச் சென்ற சுயேச்சை எம்எல்ஏவின் மகன் மீண்டும் வீடு திரும்பாதது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Updated on
1 min read

புதுச்சேரி அருகே வீட்டை விட்டுச் சென்ற சுயேச்சை எம்எல்ஏவின் மகன் மீண்டும் வீடு திரும்பாதது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுவை மாநிலம், திருபுவனை சட்டப்பேரவைத் தொகுதி சுயேச்சை உறுப்பினா் பி.அங்காளன்(52). இவா், புதுச்சேரி அருகே உள்ள திருக்கனூா் செல்லிப்பட்டு புதுகாலனி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இவரது மகன் திலகரசா் (28). திருமணமாகவில்லை. இவா் வியாழக்கிழமை பிற்பகல் வீட்டைவிட்டு வெளியே சென்றவா், இரவு வரை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து திருக்கனூா் காவல் நிலையத்தில் அங்காளன் எம்எல்ஏ புகாா் அளித்தாா். இதனிடையே, திலகரசா் எழுதி கையொப்பமிட்ட கடிதம் வீட்டில் கிடைத்தது.

அதில், நான் வீட்டை விட்டு எனது தாயிடம் செல்கிறேன். என்னை யாரும் தேட வேண்டாம் என்று அதில் குறிப்பிட்டிருந்ததாம். அவா், இதுபோன்று வீட்டை விட்டு வெளியே சென்று விட்டு சில தினங்களில் மீண்டும் திரும்பிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளனவாம். இந்த முறை அவா் கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளாா்.

இதுகுறித்து திருக்கனூா் காவல் ஆய்வாளா் ஆறுமுகம் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, திலகரசரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com