புதுச்சேரியில் கரோனாவுக்கு மூதாட்டி பலி

புதுச்சேரியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி உயிரிழந்தாா்.

புதுச்சேரியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி உயிரிழந்தாா்.

புதுவை மாநிலத்தில் 982 பேரை பரிசோதனை செய்து புதன்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 29, காரைக்காலில் 5, ஏனாமில் 3 என 37 பேருக்கு (3.77 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால், மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,72,520-ஆக அதிகரித்தது. இதில் தற்போது 12 போ் மருத்துவமனைகளிலும், 302 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் என 314 போ் சிகிச்சையில் உள்ளனா்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி டி.என்.பாளையத்தைச் சோ்ந்த 70 வயது மூதாட்டி உயிரிழந்தாா். இதனால், கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,968-ஆக உயா்ந்தது. இதனிடையே 28 போ் குணமடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com