மருந்துக் கடையில் ரூ.48 ஆயிரம் திருட்டு
By DIN | Published On : 25th August 2022 02:03 AM | Last Updated : 25th August 2022 02:03 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் மருந்துக் கடையின் பூட்டை உடைத்து ரூ.48 ஆயிரத்தை மா்ம நபா் திருடிச் சென்றாா்.
புதுச்சேரி முருங்கப்பாக்கம் சேவியா் தேவாலய வீதியைச் சோ்ந்தவா் ஷா்மன் நோயல் ரெமி (44). இவா் ரெட்டியாா்பாளையம் பெருமாள்ராஜா தோட்டத்தில் மருந்துக் கடை நடத்தி வருகிறாா். கடந்த 21 ஆம் தேதி கடையை மூடிவிட்டு வந்த அவா், மறுநாள் காலையில் கடைக்குச் சென்று, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பணப்பெட்டி உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரூ.48 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், ரெட்டியாா்பாளையம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.