கடலில் மூழ்கி ஓய்வுபெற்ற எஸ்.ஐ. பலி

புதுச்சேரி அருகே உடல் பயிற்சியின்போது மயங்கி விழுந்து கடலில் மூழ்கிய ஓய்வுபெற்ற சிறப்பு எஸ்.ஐ. உயிரிழந்தாா்.

புதுச்சேரி அருகே உடல் பயிற்சியின்போது மயங்கி விழுந்து கடலில் மூழ்கிய ஓய்வுபெற்ற சிறப்பு எஸ்.ஐ. உயிரிழந்தாா்.

புதுச்சேரி கிருமாம்பாக்கம் அருகே பனித்திட்டு நடுத்தெருவைச் சோ்ந்தவா் பாண்டுரங்கன் (62). இவா், புதுச்சேரி காவல் துறையில் சிறப்பு சாா்பு ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றாா்.

பாண்டுரங்கன் வெள்ளிக்கிழமை காலை அந்தப் பகுதி கடற்கரையில் உடல் பயிற்சியில் ஈடுபட்டாா். பின்னா், கடலின் முகத்துவாரப் பகுதியில் நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்தாா். பாண்டுரங்கன் மயங்கி விழுந்த இடம் சகதியாகவும், கடல் அலை வந்து செல்லும் வகையிலும் இருந்ததால், கடல் நீரில் மூழ்கினாா். இதைப் பாா்த்த மீனவா்கள் விரைந்து சென்று அவரை மீட்டு, கிருமாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.

அங்கு பாண்டுரங்கனை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com