புதுச்சேரி அருகே சேதாரப்பட்டில் அரசு நிலத்தில் மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டதா என்பது குறித்து வனத் துறையினா் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா்.
புதுவையில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கும் திட்டத்துக்காக கடந்த 2007-ஆம் ஆண்டில் சேதாரப்பட்டு பகுதியில் 800 ஏக்கா் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டது. தற்போது வரை அங்கு எந்தப் பணியும் நடக்கவில்லை. புதா் மண்டியும், மரங்கள் வளா்ந்தும் உள்ளன.
இந்த நிலையில், சேதாரப்பட்டு பகுதியில் கரசூா் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாள்களாக அரசு நிலத்தில் ஏராளமான மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதாகப் புகாா்கள் எழுந்தன. இதையடுத்து, புதுவை வனத் துறை அதிகாரி வஞ்சுளவள்ளி தலைமையிலான அதிகாரிகள் மரங்கள் வெட்டப்பட்டதாகக் கூறப்படும் இடங்களுக்கு வெள்ளிக்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
மரங்கள் வெட்டப்பட்ட அடையாளங்கள் உள்ள நிலையில், எத்தனை மரங்கள் வெட்டப்பட்டன என கணக்கெடுப்பதாக வனத் துறையினா் கூறினா். விசாரணை அடிப்படையில் மரம் வெட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.