தனியாா் பயிற்சி நிறுவனம் மூடல்:இளைஞா்கள் முற்றுகை
By DIN | Published On : 30th December 2022 12:55 AM | Last Updated : 30th December 2022 12:55 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூடப்பட்டதாகக் கூறி, ஏராளமானோா் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
புதுச்சேரி வள்ளலாா் சாலையில் காமராஜ் நகா் பகுதியில் வியூகா எனப்படும் சிறப்பு பயிற்சி நிறுவனம் செயல்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞா்கள் சோ்ந்து பயிற்சி பெற பணம் செலுத்தினராம்.
இந்த நிலையில், அந்த அலுவலகம் சில நாள்களாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து, பயிற்சிக்காக பணம் செலுத்தியவா்கள் அலுவலகம் முன் வியாழக்கிழமை கூடினா். தகவலறிந்த பெரியகடை போலீஸாா் விரைந்து சென்று விசாரணை நடத்தினா். பின்னா், அந்த நிறுவனத்தினரை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டனா். விசாரணைக்குப் பிறகே பயிற்சி நிறுவனம் மூடப்பட்டதா என்பது குறித்து கூற முடியும் என போலீஸாா் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...