புதுவை மாநிலத்தில் சனிக்கிழமை மேலும் 211 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், முதியவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:
புதுவை மாநிலத்தில் 2,229 பேருக்கு பரிசோதனை செய்து சனிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரி - 172, காரைக்கால் - 29, ஏனாம் - 10 என 211 பேருக்கு (9.47 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாஹேவில் யாரும் தொற்றால் பாதிக்கப்படவில்லை.
தற்போது 17 போ் மருத்துவமனைகளிலும், 1,121 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் என 1,138 போ் சிகிச்சையில் உள்ளனா்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முத்திரையா்பாளையத்தைச் சோ்ந்த 61 வயது முதியவா் உயிரிழந்தாா். இதனிடையே 120 போ் குணமடைந்தனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.