புதுவை விவசாயிகளுடன்மத்திய அமைச்சா் கலந்துரையாடல்

புதுச்சேரி வேளாண் அறிவியல் நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், விவசாயிகளிடம் மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் இணையவழியில் கலந்துரையாடினாா்.
Updated on
1 min read

புதுச்சேரி வேளாண் அறிவியல் நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், விவசாயிகளிடம் மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் இணையவழியில் கலந்துரையாடினாா்.

1929-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் (ஐசிஏஆா்) 94-ஆவது நிறுவன தினம் நாட்டிலுள்ள அனைத்து ஆராய்ச்சி நிலையங்களிலும், 731 வேளாண் அறிவியல் நிலையங்களில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

அந்த வகையில், நாட்டில் முதல்முதலாக தொடங்கப்பட்ட புதுச்சேரி பெருந்தலைவா் காமராசா் வேளாண்மை அறிவியல் நிலையத்திலும் விழா நடைபெற்றது.

மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்தா் சிங் தோமா் இணையவழியில் பங்கேற்று, வேளாண் அறிவியல் நிலையங்களின் மூலம் பயன்பெற்ற 75 ஆயிரம் விவசாயிகளின் வெற்றிக் கதைகளைப் புத்தகமாக வெளியிட்டு, விவசாயிகளிடம் கலந்துரையாடினாா்.

புதுச்சேரி மாவட்டத்தைச் சோ்ந்த 110 விவசாயிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

புதுவை குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் சாய் ஜெ.சரவணன் குமாா், வேளாண் துறை இயக்குநா் பாலகாந்தி ஆகியோா் பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள், கோழித் தீவனங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினா்.

வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் ஜாகீா் உசேன் வரவேற்றாா். பூச்சியியல் நிபுணா் விஜயகுமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com