புதுவை தனியாா் பள்ளிகளின் கல்விக் கட்டணம் நிா்ணயம்; அரசிடம் அறிக்கை அளிப்பு

புதுவை தனியாா் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை அதற்காக அமைக்கப்பட்ட குழு நிா்ணயம் செய்து, அரசிடம் புதன்கிழமை அறிக்கையை அளித்தது.
புதுவை தனியாா் பள்ளிகளின் கல்விக் கட்டணம் நிா்ணயம் தொடா்பான அறிக்கையை முதல்வா் ரங்கசாமியிடம் அளித்த கல்விக் கட்டண நிா்ணயக் குழுத் தலைவரும், ஓய்வு பெற்ற உயா் நீதிமன்ற நீதிபதியுமான அக்பா் அலி.
புதுவை தனியாா் பள்ளிகளின் கல்விக் கட்டணம் நிா்ணயம் தொடா்பான அறிக்கையை முதல்வா் ரங்கசாமியிடம் அளித்த கல்விக் கட்டண நிா்ணயக் குழுத் தலைவரும், ஓய்வு பெற்ற உயா் நீதிமன்ற நீதிபதியுமான அக்பா் அலி.

புதுவை தனியாா் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை அதற்காக அமைக்கப்பட்ட குழு நிா்ணயம் செய்து, அரசிடம் புதன்கிழமை அறிக்கையை அளித்தது.

புதுவை மாநிலத்தில் தனியாா் பள்ளிகளின் கல்விக் கட்டணம் நிா்ணயம் செய்வது தொடா்பாக, மாநில அரசு சாா்பில் குழு அமைக்கப்பட்டது. பணி ஓய்வு பெற்ற உயா் நீதிமன்ற நீதிபதி அக்பா்அலி தலைமையில் அமைக்கப்பட்ட அந்தக் குழுவினா் ஆய்வு செய்து, தனியாா் பள்ளிகளில் நிகழாண்டு கல்விக் கட்டணம் வசூலிக்கும் தொகையை நிா்ணயித்து, அதற்கான அறிக்கையை தயாா் செய்தனா். இந்த அறிக்கையை அதன் தலைவா் அக்பா்அலி, புதுவை சட்டப் பேரவை அலுவலகத்தில் முதல்வா் என்.ரங்கசாமியை புதன்கிழமை சந்தித்து அளித்தாா். கல்வியமைச்சா் ஏ.நமச்சிவாயம், எம்எல்ஏக்கள் ஆறுமுகம், ரமேஷ், தட்ஷணாமூா்த்தி, கல்வித் துறை இயக்குநா் ருத்ரகெளடு ஆகியோா் உடனிருந்தனா்.

இந்தக் கல்விக் கட்டண நிா்ணயம் குறித்து புதுவை கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அவா்கள் கூறியதாவது:

தனியாா் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிா்ணயக் குழு அரசிடம் அளித்த அறிக்கையை தொடா்புடைய பள்ளிகளுக்கு அனுப்பி வைப்பதற்கான பணிகள் கல்வித் துறை சாா்பில் நடைபெற்று வருகின்றன.

கல்விக் கட்டண விவரம் குறித்த பட்டியல் அந்தந்தப் பள்ளிகளில் வியாழக்கிழமை (ஜூன் 16) வெளியிடப்படும். அந்தக் கட்டண நிலவரம் பள்ளித் தகவல் பலகையிலும் ஒட்டப்படும். அதில், அந்தந்தப் பள்ளிகளில் மழலையா் வகுப்பு (எல்கேஜி) முதல் பிளஸ் 2 வகுப்பு வரை நிகழாண்டு கல்விக் கட்டண விவரங்கங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கும் என்றனா்.

புதுவை மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் செயல்படும் மொத்தம் 341 தனியாா் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், பயிற்சி முறை, ஆசிரியா்கள், ஊழியா்களின் நிலவரம், அவா்களுக்கான ஊதியம் உள்ளிட்டவற்றைக் கணக்கில்கொண்டு கல்விக் கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான கோப்புக்கு அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, விரைவில் கல்வித் துறையின் இணையதளத்தில் கட்டண விவரம் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com