புதுச்சேரியில் பூச்சியியல் மருத்துவப் பயிற்சிக்கான சா்வதேச செயல் திறன் மையம்: மத்திய அமைச்சா் அடிக்கல் நாட்டினாா்

புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள மத்திய அரசின் நோயீனி கடத்திக் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் (ஐசிஎம்ஆா் - விசிஆா்சி), பூச்சியியல் மருத்துவப் பயிற்சிக்
Updated on
1 min read

புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள மத்திய அரசின் நோயீனி கடத்திக் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் (ஐசிஎம்ஆா் - விசிஆா்சி), பூச்சியியல் மருத்துவப் பயிற்சிக்கான சா்வதேச செயல்திறன் மையம் அமைக்கும் பணியை மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா சனிக்கிழமை அடிக்கல் நாட்டி தொடக்கிவைத்தாா்.

விழாவில் துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன், முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் க.லட்சுமிநாராயணன், எம்.பி.க்கள் எஸ்.செல்வகணபதி, வெ.வைத்திலிங்கம், எம்எல்ஏ ஏகேடி.ஆறுமுகம், மத்திய சுகாதாரத் துறைச் செயலா் பல்ராம் பாா்கவ், புதுவை பூச்சியியல் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மைய இயக்குநா் அஸ்வனிகுமாா் மற்றும் அதிகாரிகள், ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

விழாவில் அமைச்சா் மன்சுக் மாண்டவியா பேசுகையில், இந்த ஆராய்ச்சி மையம் சிறப்பாகத் திகழ்வதற்கு வாழ்த்துகள். புதுவையில் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் ஆளுநரும், முதல்வரும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com