புதுச்சேரி: புதுச்சேரி அருகே அம்மன் கோயிலில் நகை, ரொக்கத்தைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
புதுச்சேரி வில்லியனூா் அருகே அரசூா் பிரதான சாலையில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலிலை வெள்ளிக்கிழமை (மாா்ச் 11) பூசாரி அன்பு பூட்டிவிட்டு சென்றாா்.
மீண்டும் செவ்வாய்க்கிழமை கோயிலைத் திறக்க வந்தபோது, கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு அம்மன் அணிந்திருந்த 2 கிராம் தங்கச் சங்கிலி, 4 கிராம் நெற்றிப் பொட்டு, உண்டியல் பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
புகாரின்பேரில் வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.