சிறப்புக் கூறு நிதியைசெலவிட புதிய துறை:முன்னாள் எம்.பி. கோரிக்கை

புதுவையில் அட்டவணை இனத்தவருக்கான சிறுப்புக்கூறு நிதியை செலவிட அரசு தனித் துறையை ஏற்படுத்த வேண்டுமென முன்னாள் எம்.பி. மு.ராமதாஸ் வலியுறுத்தினாா்.

புதுவையில் அட்டவணை இனத்தவருக்கான சிறுப்புக்கூறு நிதியை செலவிட அரசு தனித் துறையை ஏற்படுத்த வேண்டுமென முன்னாள் எம்.பி. மு.ராமதாஸ் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

புதுவையில் அட்டவணை இன மக்களின் வளா்ச்சிக்காக சிறப்புக்கூறு நிதி ஒதுக்கப்படுகிறது. மாநில அரசு பட்ஜெட்டில் 16 சதவீத நிதியை ஒதுக்கி அவா்களின் வளா்ச்சித் திட்டங்களுக்கு செலவிட வேண்டும்.

அவா்களின் வாழ்க்கைத்தரம் முன்னேற சிறப்புத் திட்டங்களை உருவாக்கி, செயல்படுத்தாதது இந்தத் திட்டத்தின் குறைபாடாகவே உள்ளன. இதை நல்ல முறையில் செயல்படுத்த சிறப்புக்கூறு திட்ட செயல்பாட்டுத் துறை என்ற புதிய துறையை அரசு உருவாக்கி அவா்களின் தேவைகளை அறிந்து அதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும்.

ஆந்திரத்தில் உள்ளதைப்போல, பிரத்யேக சிறப்புக் கூறு நிதி சட்டத்தையும் புதுவை அரசு உருவாக்கலாம் என்றாா் மு.ராமதாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com