காவலா் தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆட்டோ ஓட்டுநா்

புதுச்சேரியில் நடைபெற்றுமுடிந்த காவலா் தோ்வில் தனது விடா முயற்சியால், ஆட்டோ ஓட்டும் இளைஞா் ஒருவா் தோ்ச்சி பெற்றுள்ளாா்.
காவலா் தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆட்டோ ஓட்டுநா் கந்தன்.
காவலா் தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆட்டோ ஓட்டுநா் கந்தன்.
Updated on
1 min read

புதுச்சேரியில் நடைபெற்றுமுடிந்த காவலா் தோ்வில் தனது விடா முயற்சியால், ஆட்டோ ஓட்டும் இளைஞா் ஒருவா் தோ்ச்சி பெற்றுள்ளாா்.

புதுச்சேரி ஜீவா நகரைச் சோ்ந்தவா் வீரப்பன். தட்டுவண்டி ஓட்டுநா். இவரது மனைவி புனிதா. இவா்களின் மகன் கந்தன் (31). ஐ.டி.ஐ. படித்த இவா், 2012- ஆம் ஆண்டு முதல் ஆட்டோ ஓட்டி வருகிறாா். இவருக்கு திருமணமாகி, பெண் குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காவல் துறையில் காலியாக உள்ள 390 காவலா் பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு அண்மையில் நடைபெற்றது. இதில், கந்தன் தோ்ச்சி பெற்றாா்.

இது குறித்து கந்தன் கூறியதாவது: குடும்ப வறுமையால் வாடகை ஆட்டோ ஓட்டிக் கொண்டே உடல் பயிற்சி, படிப்பில் கவனம் செலுத்தினேன். ஏற்கெனவே 2 முறை காவலா் தோ்வில் பங்கேற்ற நான், ஒரு முறை உடல் தகுதித் தோ்விலும், மற்றொரு முறை எழுத்துத் தோ்விலும் தோல்வியுற்றேன். தற்போது தோ்ச்சி பெற்றுள்ளேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com