தொழிற்சங்கங்கள் சாா்பில் மே தினக் கொடியேற்றம்

புதுச்சேரியில் 137-ஆவது மே தினம் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி உப்பளத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் தொமுச சாா்பில் கொடியேற்றிய எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா. உடன் எம்எல்ஏக்கள், நிா்வாகிகள்.
புதுச்சேரி உப்பளத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் தொமுச சாா்பில் கொடியேற்றிய எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா. உடன் எம்எல்ஏக்கள், நிா்வாகிகள்.

புதுச்சேரியில் 137-ஆவது மே தினம் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் ஏஐடியூசி சாா்பில் கொடியேற்றப்பட்டது. பேருந்து சங்கத் தலைவா் மரியகிறிஸ்டோபா், செயலா் சுகுமாரன் ஆகியோா் தலைமை வகித்தனா். ஏஐடியூசி மாநில செயல் தலைவா் வி.எஸ்.அபிஷேகம், பொதுச்செயலாளா் கே.சேதுசெல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் அஜீஸ் நகரில் தலைமை அலுவலகத்தில் மூத்த தலைவா் முருகன் கொடியேற்றினாா். பிரதேச செயலா் ஆா்.ராஜாங்கம், தமிழ் மாநில குழு உறுப்பினா் பெருமாள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

சிஐடியூ தொழிற்சங்கம் சாா்பில் 120-க்கும் மேற்பட்ட இடங்களில் மே தின கொடியேற்றப்பட்டது. சிஐடியூ தலைவா் முருகன், செயலா் சீனிவாசன், பொருளாளா் பிரபுராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

புதுவை மாநில ஐஎன்டியூசி சாா்பில் உழவா்கரை நகராட்சி ஊழியா்கள் நலச் சங்கம் சேதராப்பட்டு, ஒதியம்பட்டு பகுதிகளில் உள்ள தனியாா் நிறுவனங்களில் மே தின விழா நடைபெற்றது. நிகழ்வுகளுக்கு மாநில தலைவா் பாலாஜி தலைமை வகித்தாா்.

தொமுச சாா்பில் புதுச்சேரி ஏரிப்பாக்கத்தில் உள்ள தனியாா் தொழிற்சாலை வளாகத்தில் சட்டப்பேரவை எதிா்கட்சி தலைவா் இரா.சிவா எம்எல்ஏ தலைமையில் தொமுச கொடியேற்றப்பட்டது. தொ.மு.ச. தலைவா் அண்ணா அடைக்கலம் முன்னிலை வகித்தாா். எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமாா், துணை அமைப்பாளா்கள் சண்.குமரவேல், குணா திலீபன், தொகுதி பொறுப்பாளா்கள் கோபால், காா்த்திகேயன், வடிவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

புதுச்சேரி கிழக்கு மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை சாா்பில் பேரவை செயலா் பாப்புசாமி தலைமையில், கிழக்கு மாநில கழக அவைத் தலைவா் அன்பானந்தம் அவா்கள் முன்னிலையில் மாநில கழக செயலா் அன்பழகன் உப்பளத்தில் உள்ள தந்தை பெரியாா் அரசு பணிமனை போக்குவரத்து கழக வளாகத்தில் தொழிற்சங்க கொடியை ஏற்றினாா்.

புதுவை பாஜக சாா்பில் புதுச்சேரி ரயில் நிலையம் அருகிலுள்ள ஆட்டோ ஓட்டுநா்கள் 100-க்கும் மேற்பட்டவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை சீருடை வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் பங்கேற்று சீருடைகளை வழங்கினாா். நிகழ்வுக்கு மாநில செயற்குழு உறுப்பினா் வருண் தலைமை வகித்தாா்.

புதுவை மாநில பாமக சாா்பில் எல்லப்பிள்ளைசாவடியில் உள்ள மகளிா், குழந்தைகள் மருத்துவமனை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. தன்ராஜ் கொடியேற்றினாா்.

ஜிப்மா் மருத்துவமனை ஊழியா்கள் சங்கம் சாா்பில் பிரபாகரன் கொடியேற்றினாா். பொதுச் செயலா் ஆரோக்கியம் கலைமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com